3

வாழ்ந்த காலத்தை
மனசுக்குள்
வாழும் காலத்தை
“இறந்த காலம்”
என்று சொல்கிறது மொழி

2

பிள்ளைகள் பள்ளி கிளம்ப
பெரியவர்கள்
அலுவலகம் கிளம்ப
பகலெல்லாம்
தனிமையில் காத்திருக்கின்றன
நகரத்து வீடுகள்.

1

கோடிக் கோடி
பிரதிகள் எடுக்கின்றன
நீர் நிலைகள்.
ஒற்றை நிலவை.