அப்பாவுக்கு
அரசாங்க வேலை.
நினைத்த போது வரும்
ஊர் மாற்றல்
உத்தரவு.
நாடோடியாய்
வாழ நேர்ந்தது
பல ஊர்களில்..
சொந்த ஊர் என்பது
எப்போதேனும்
எட்டிப் பார்க்க…
பள்ளிப் படிப்பிற்கு
பல ஊர்…
கல்லூரிப் படிப்பிற்கு
கண் காணாத் தொலைவில்
ஒரு ஊர்…
வேலையில் இருப்பதோ
வேறு ஊர்.
‘ எது உன் ஊர் ‘
யாரேனும் கேட்டால்
சொல்ல முடியவில்லை
சட்டென்று பதில்.
No Comments Yet
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.
மறுமொழியவும்

