வீட்டிற்குள்
கூட்டிப் பெருக்கி
சமைத்துக் கழுவி
துவைத்துப் பிழிந்து
களைத்துப் போன
மனைவிகள் காத்திருக்கிறார்கள்
கணவனின் விடுமுறையில்
ஊர் உலகு பார்க்க…
உறங்கப் பொழுதின்றி
ஊர் உலகு சுற்றி
உழைத்துக் களைத்துச்
சலித்துப் போன
கணவர்கள் காத்திருக்கிறார்கள்
தனது விடுமுறையில்
வீட்டில் ஓய்வெடுக்க…
( ஆனந்த விகனில் முத்திரைக் கவிதையாக தேர்வாகி 2000 பரிசு பெற்ற கவிதை)
No Comments Yet
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மறுமொழிகள் RSS பின்னறியும் தடத்தை கண்டறிய உதவுவது URI ஆகும்.
மறுமொழியவும்




மழையின் சுவடுகள்