தீராதவை…

படித்துத் தீராமல்
புத்தகங்கள்.
பார்த்துத் தீராமல்
காட்சிகள்.
கேட்டுத் தீராமல்
செய்திகள்.
நாம் தீர்ந்தாலும்
இவை தீரா…
பெரும்பரப்பாய் கடல் இருந்தும்
அவசியமானதை
அளந்து முகரும் மேகம்….