எனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை
தொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.
நன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக [...]
ஆகஸ்ட் 11, 2009
பகுப்புகள்: அறிமுகம், குறும்படம், நடந்தகதை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அழகிய பெரியவன், குறும்படம், நடந்தகதை, பொன்.சுதா, விழா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .
என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.
பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.
15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.
ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் [...]
பெப்ரவரி 24, 2009
பகுப்புகள்: அனுபவம், அறிமுகம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: அனுபவம், அன்புமதி, இலக்கியம், கட்டுரை, கதை, தமிழ்பதிவு, பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வலைப்பதிவு, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
01.09.08 தீராநதி நேர்காணல்
உலகெங்கும் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படும் பிரச்சினை சுற்றுச் சூழல் பிரச்னை. இதையொட்டி ஆக்கபூர்வமான இயக்கப் பணிகளை தமிழில் பல குழுக்கள் செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத் தகுந்த குழுவாக `பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சொல்லலாம். நெடுஞ்செழியனின் பங்களிப்பில் இயங்கிய இக்குழு அவரது மறைவிற்குப் பிறகு கொஞ்சம் தேக்கம் கண்டது. இதனுடன் இணைந்து செயலாற்றிய காளிதாஸ், இப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து
`ஓசை’ என்ற சுற்றுச் சூழல் இயக்கத்தை இயக்கி வருகிறார்.
ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்க [...]
செப்டம்பர் 29, 2008
பகுப்புகள்: அறிமுகம், அலசல், எண்ணங்கள், பகிர்தல் . குறிச்சொற்கள்: ஓசை காளிதாசன், சுற்றுச்சூழல், தீராநதி, நேர்காணல், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்