“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.
நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.
‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.
அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் [...]
அக்டோபர் 20, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்: அனுபவம், அன்புமதி, இலக்கியம், கதை, கதைகள், தமிழ், பகிர்தல், பொன்.சுதா . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
குரல் காதில் விழுவதற்கு முதல் நொடியில் கூட பேசுவது
அமுதாவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஹலோ’
என்ற ஒரே வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன். சென்னைக்கு
வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நான் கல்யாணத்திற்கு வரவில்லை என்ற கோபத்தில் தொலைபேசி எண், முகவரி எல்லாம் இருந்தும் வைராக்கியமாய் அவள் தொடர்பு கொள்ளவே இல்லை.
தினந்தோறும் எதிர்ப்படும் முகங்களில் அவள் இருந்து விடமாட்டாளா எங்காவது துணிக்கடையில் துணி வாங்கிக் [...]
ஏப்ரல் 13, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: இலக்கியம், கதை, கதைகள், சிறுகதைகள், தமிழ், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
1 மறுமொழி
சார், யாரு ?’ என்று என் பக்கம் திரும்பிக் கேட்டார் அவர். கேட்டவர் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இயக்குனர். கேட்ட இடம்
ஏவிஎம் படப்பிடிப்புத் தளம்.
சென்னை வந்து சில ஆண்டுகளாகியும் உதவி இயக்குநராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், அப்பா தனக்குத் தெரிந்தவரும், தற்போது நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பின் தயாரிப்பாளரும் கதாநாயகருமான புகழ் பெற்ற நடிகரின் நெருங்கிய நண்பருமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி கொடுத்து இருந்தார். கடிதமும் எதிர்பார்ப்புமாக நடிகரை சந்திக்க காத்துக் கொண்டிருதேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் [...]
மார்ச் 16, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: இலக்கியம் குழந்தை, கதை, கதைகள், தமிழ், பகிர்தல், பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
பட படவென்று கதவு தட்டப் பட்டது, அதிர்ந்து விழித்தேன். இருள் இன்னும் முழுமையாக வெளுத்திருக்கவில்லை. இரவு முழுதும் தூக்கம் வராமல் போராடி இப்போது தான் கண் மூடினேன். கண் எரிந்தது. எழ முயற்சிப்பதற்கு முன் இன்னொரு முறை கதவு தட்டப் பட்டது. தட்டிய கைகளுக்குள்அவசரமான செய்தி [...]
பெப்ரவரி 25, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கதை, கதைகள் . குறிச்சொற்கள்: இலக்கியம், கதை, தமிழ்பதிவு, பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
அன்று காலையில் இருந்தே மகிழ்வும் கவலையும் கலந்த உணர்வுப் பெருக்கில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.
என் அக்காள் பெண் நர்மதாவின் திருமணம் அன்று .
என் மகள் அன்புமதிக்கு எல்லாம் கொண்டாட்டமாக இருந்தது.
பந்தல் போட்ட வீடு. அலங்காரங்கள், வாழை மரம் , தென்னம் பாளை, எல்லாவற்றையும் வித்தியாசமாய் பார்த்த படி இருந்தாள்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருந்த தருணமாக இருந்தது அவளுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம்.
15 வயது குறைவு நர்மதாவை விட அன்புமதிக்கு.
ஆனாலும் எப்போதும் வாடி போடி என்று தான் [...]
பெப்ரவரி 24, 2009
பகுப்புகள்: அனுபவம், அறிமுகம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கதை, கதைகள், பகிர்தல் . குறிச்சொற்கள்: கட்டுரை, பொன்.சுதா, அன்புமதி, வலைப்பதிவு, அனுபவம், இலக்கியம், வாழ்க்கை, பகிர்தல், தமிழ்பதிவு, பதிவுகள், கதை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்
அன்புமதிக்கு டாம் அன்ட் ஜெர்ரி என்றால் அவ்வளவு பிடிக்கும்.
வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் டிவிடியில் இருக்கும் டாம் அன்ட் ஜெர்ரி படங்களைப் பார்ப்பது தான் வேலை..
6 வயது சிறுமிக்கு இயல்பான பொழுது போக்கு தான் என்றாலும் அவ்வப் போது எனக்கு உறுத்தலாக இருக்கும்.
ஓரே வீட்டில் யாரோ போல நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது இப்போதெல்லாம்.
நாங்கள் என்பது நான், மனைவி உமா , மகள் அன்புமதி.
நகர வாழ்வின் கைகளில் சோழி முத்துகள் போல உருட்டி எறியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நொடிகள் தோறும் [...]
பெப்ரவரி 12, 2009
பகுப்புகள்: அனுபவம், இலக்கியம், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: Add new tag, அன்புமதி, இலக்கியம், கட்டுரை, கட்டுரைகள், கதை, பகிர்தல், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
3 மறுமொழிகள்
அப்பா ரிட்டையர்ட் ஆவதற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்.
ஓய்வு பெறும் போது அலுவலகத்தில் நடக்கும் பிரிவு உபச்சார விழாவில் நான், தம்பி, அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஓய்வு பெற்றாலும் பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்கு என்று ஆறுதல் கொள்ளவாக இருக்கும்.
மனைவிக்கு விடுமுறை எடுப்பதில் தான் பிரச்சனை. அந்தக் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது. எனவே [...]
மார்ச் 10, 2008
பகுப்புகள்: அனுபவம், அலசல், இலக்கியம், எண்ணங்கள், கட்டுரை, பகிர்தல் . குறிச்சொற்கள்: அன்புமதி, இலக்கியம், கட்டுரைகள், தமிழ், தமிழ் பதிவுகள், பொன்.சுதா, வாழ்க்கை . பதிவர் : பொன்.சுதா . மறுமொழிகள்:
2 மறுமொழிகள்