அரங்கமும் மனமும் நிறைந்த அறிமுகவிழா

எனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை
தொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.
நன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக [...]

“நடந்தகதை” குறும்படத்தின் அறிமுக நிகழ்விற்கு அனைவரும் வருக.. வருக..

“நடந்தகதை” என்னும் எனது இரண்டாவது குறும்படத்தின் அறிமுகவிழா 08 08 09 சனிக்கிழமை அன்று சென்னை பிலிம் சேம்பரில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.
அழகிய பெரியவனின் ‘குறடு’ சிறுகதையை 20 நிமிடப் படமாக்கி உள்ளேன்.
இயக்கம்- பொன்.சுதா
ஒளிப்பதிவு – இராசாமதி (சக்கரைக்கட்டி, புதியவார்ப்புகள், பேசு
படத்தின் ஒளிப்பதிவாளர் )
படத்தொகுப்பு – எ.எல்.ரமேஷ் ( நாடோடிகள் படத்தின் படத் தொகுப்பாளர்)
இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியின் ஈழம், நேதாஜி தொடர்களின் இசையமைப்பாளர்)
கதை – அழகிய [...]

100000 பார்வைகளைத் தாண்டிய மறைபொருள் குறும்படம்

எனது மறைபொருள் குறும்படம் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.
பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.
மக்கள் பார்வைக்காக யூ டியூப்பில் 8 மாதத்திற்கு முன் படம் பதிவிடப் பட்டது.
8 மாத முடிவிற்குள் 1,19,027 பார்வைகளைப் பெற்றுள்ளது.
பார்த்து பாராட்டிய, விமர்சித்த அனைவருக்கும் நன்றி…
நீங்கள் பார்க்க விரும்பினால்…
பார்க்கும் முன் ஒரு வார்த்தை நான் பகுத்தறிவுவாதி … பெரியாரின் வழி நடப்பவன்.