பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிட்டது என்று அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். வண்டியின் பின்புறம் ஏறிய படியே அன்புமதி கேட்டாள்.
‘ அப்பா அச்சுங்கிறது பொண்ணுகளுக்கு வைக்கிற பேரா? ‘
மலையாளப் படம் ‘ அச்சுவின்ட அம்மா ‘ பார்த்தது நல்லதாகிப் போனது.
‘ ஆமா பாப்பா பொண்ணுக பேரு தான். கேரளாவில வைப்பாங்க… ‘ என்றதும் உடனேயே
‘ ஏம்பா அந்தப் பேரப் போய் வைக்குறாங்க? ‘ என்றாள் ரெம்பக் கவலையாக.
ஒன்றும் புரியாமல் ‘ ஏன் அந்தப் பேருக்கு என்ன குறைச்சல்’ என்றேன்.
‘ இல்லப்பா யாரு அச்சு அச்சு தும்மினாலும் அவ திரும்பிப் பார்ப்பாளே , அவ பாவம் தானே ‘ என்றாள் ரெம்ப சிந்தனையாக.
வெடித்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்னால் ,எதிரில் வருபவர்கள் அதிர்ச்சியாய் பார்த்தாலும்.
பின்னூட்டமொன்றை இடுக
இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
மறுமொழியொன்றை இடுங்கள்