கொட்டிக்கிடக்குது குட்டிக் கதைகள்

கதைகளில் குட்டிக் கதைகள் அற்புதமானவை.

சாருநிவேதிதாவின் குட்டிக் கதைகளைச் சொல்லவில்லை.

சில வரிகளில் அற்புதமான கருத்துக்களையோ, சிந்தனையையோ, நகைச்சுவையோ கொடுத்து விடக் கூடியவை குட்டிக் கதைகள்.

ஈசாப் குட்டிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவைகள் தான் சிறுகதைகள், நாவலுக்கான மூலவிதைகள்.

ஜென் கதைகள், மற்றும் மத உபதேசங்களின் பொருட்டு உண்டான குட்டிக் கதைகள் ஏராளம்.

தமிழில் பாக்யராஜ் கேள்வி பதிலில் பல்வேறு குட்டிக் கதைகளைப் பயன்படுத்தி பிரபலப்படுத்தினார்.

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் கதைகளும், நறுக்குகளும் தமிழ் இலக்கியத்திற்கான பெரும் கொடைகள்.

எஸ். ராமகிருஷ்ணன் கூட இந்த ஆண்டில் நகுலனின் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுக்க பெரும் இலக்கியவாதிகள் ஒரு சில குட்டிக் கதைகளையாவது எழுதியுள்ளார்கள்.

மின் மினி தேசம் என்ற சமீபத்தில் பூத்த வலைப்பூ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.

குட்டிக் கதைகளுக்கு மட்டுமே ஆன ஒரு வலைப்பூ அது. கொட்டிக் கிடக்குது குட்டிக் கதைகள் அங்கே.

பெரும்பாலும் நகைச்சுவையும், அங்கதமுமான குட்டிக் கதைகளே நிறைந்திருக்கிறது.

குட்டிக் கதைகளுகான வலைப்பூவிற்கு மின்மினி தேசம் என்ற ரசனையான பெயர்.

குட்டிக் கதை ரசிகர்கள் தவறாமல் தினமும் எட்டிப் பார்க்க வேண்டிய வலைப்பூ அது.

படித்துப் பயன் பெறுக…

http://minminidesam.blogspot.com/

அழகிய பெரியவனுக்கு தமிழக அரசின் விருது….

அழகிய பெரியவன் தமிழின் முக்கியமான படைப்பாளி.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற அனைத்து இலக்கிய படைப்பாக்க வெளிகளிலும் தனது முத்திரையை பதித்து வருபவர்.

தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கக் கூடியவை இவரது படைப்பின் குரல்.

நவீன எழுத்து முறையும், வாழ்வியல் விட்டு விலக்காத கதை களமுமாக அற்புத கலவை இவரது எழுத்துகள்.

பேரணாம் பட்டைச் சேர்ந்தவர் அழகிய பெரியவன்.

ஒரு பள்ளி ஆசிரியராக எளிய வாழ்வு வாழும் எழுத்தாளர்.

எளிமையான மனிதர்.

சமரசமற்ற போராளி, எழுத்தோடு நில்லாமல் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் முன்னனியில் நிற்பவர் அழகிய பெரியவன்.

அவரது ‘ உனக்கும் எனக்குமான சொல் ‘ என்ற கவிதைத் தொகுப்பிற்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.

சரியான நபருக்கு சரியான படைப்புக்கு விருது கிடைத்துள்ளது.

அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

’நடந்த கதை’ குறும்படம் புத்தக கண்காட்சியில் 256 & 257 விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘ நடந்த கதை ‘ குறும்படம்.

அழகிய பெரியவனின் ‘ குறடு’ சிறுகதையை ’நடந்தகதை’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்துள்ளேன்.

ஒரு தலித்தின் வாழ்வைச் சொல்லுகிற கதை அது.

திரைகதை, வசனம், இயக்கம் – பொன்.சுதா ( மறைபொருள்)

கதை- அழகிய பெரியவன் ( நெறிக்கட்டு, தகப்பன் கொடி, தீட்டு, உனக்கும் எனக்குமான சொல்,
கிளியம்மாவின் இளம் சிவப்புக் காலை, அரூப நஞ்சு, …….)

ஒளிப்பதிவு – இராசாமதி ( கக்கரைக்கட்டி, சித்து +2, பேசு, குறுநில மன்னர்கள்)

படத் தொகுப்பு – ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)

இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியில் ஈழம், நேதாஜி)

தயாரிப்பு – அருள் சங்கர் ( கலர்ஸ்)

வெளியான சில மாதங்களிலேயே பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், போளூர், சென்னை, உடுமலைப்பேட்டை, சத்தியமங்கலம் என்று பல ஊர்களில் பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், பதியம், சுழி , உரத்த சிந்தனை, பூங்குயில் படைப்பாக்க வெளி போன்ற பல்வேறு அமைப்புகளால் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

மக்கள் தொலைக்காட்சி, மற்றும் சன் செய்திகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனந்தவிகடன், சினிமா எக்ஸ்பிரஸ், தலித்முரசு, நிழல், உண்மை, போன்ற இதழ்களிலும், தெனாலி, சென்னை ஆன்லைன், கூடு போன்ற இணைய இதழ்களிலும் பல்வேறு வலைப்பூக்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

போளூரில் நடைபெற்ற கிராமிய குறும்படவிழாவில் முதல் பரிசு பெற்றது. பெரியார் திரை நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ‘ நடந்த கதை’

சென்னை புத்தக கண்காட்சியில் கோவை விஜயா பதிப்பகத்தின் கடையான 256 & 257 ல் ’நடந்த கதை’ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறும்படம் மற்றும் மாற்று திரைப்பட ஆர்வலர்கள் வாங்கிப் பயன்பெறுங்கள்.

பார்த்ததோடு மட்டுமல்லாமல் உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=c145e2d5-7c63-4d90-a2b8-815ecebc8885&CAT

http://www.thenaali.com/thenaali.aspx?A=678

http://www.chennaidigest.in/epaper.aspx?date=8/14/2009&p=5

http://veeduthirumbal.blogspot.com/2009/11/3.html

http://guhankatturai.blogspot.com/

http://koodu.thamizhstudio.com/kurunthirai_1_nadandha_kadhai_yazh_231109.php

Click to access 46.pdf

Click to access 47.pdf

http://etiroli.blogspot.com/2009/12/blog-post_23.html

http://viduthalai.periyar.org.in/20091228/Page06.html

‘திற’ குறும்படம் திரையிடல் மற்றும் திறனாய்வு

எனது நண்பர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் மிகச் சிறந்த குறும்படமான ‘திற’ குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 நடைபெற உள்ளது.

‘திற’ தமிழில் வந்த குறும்படங்களில் ஒரு சில சிறந்த படங்களில் முக்கியமானது . சதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதை ஒன்றை இன்றைய கால கட்டத்திற்கு தக்கவாறு தழுவி எடுக்கப்பட்ட படம்.

தரமான தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. மிகவும் சவாலான கதையை திறம்பட கையாண்டுண்டிருந்தார் பிரின்சு என்னாரெசு பெரியார்.

குஜராத் கலவரத்தை காட்சிப்படுத்தி அந்த கலவரத்தின் ஒட்டு மொத்த வலியையும் உணர்த்தக் கூடிய ஒரு சம்பவமாக இருக்கிறது கதை.

பிரின்சு என்னாரெசு பெரியார் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தவர். கெளதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

சமூக சிந்தனையும், அசாத்திய துணிச்சலும் தான் இப்படத்திற்கான பின்னனியில் இருக்கிறது.

’திற’ குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நாளை நடக்கிறது. அனைவருக்கும் இக்குறும்படத்தை காணும் வாய்ப்பு.

அனைவரும் வருக.

ஹைக்கூத் தோட்டம்- 57

andar420

அமைதியாய் இருந்தாலும்

மதம் பிடித்த யானை

நெற்றியில் நாமம்.

பெயர்க் காரணம்

824aa776135ed6068e3c56519034c870

“ எனக்கு ஏம்பா அன்புமதின்னு பேரு வைச்ச ” திடிரென ஒரு இருசக்கர வாகனத்தின் பயணத்தின் பாதியில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்திருந்த அன்புமதி கேட்டாள்.

நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தேடி அர்த்தம் அறிந்து பிடித்துப் போய் வைத்ததினால் உடனடியாய் பதில் சொல்ல முடிந்தது.

‘ ஒரு மனுசனுக்கு அறிவு அதிகம் இருந்து அன்பு இல்லாமல் போனால் அவன் முழுமையானவன் இல்லை.

அதே போல ஒருத்தருக்கு அன்பு அதிகம் இருந்து அறிவே இல்லாமல் போனால் அதுவும் வீண் தான்.

அன்பும் அறிவும் ரெண்டும் இருந்தால் தான் அவங்க முழுமையான சிறந்த மனுசங்களா இருக்க முடியும். அதுனால தான் உனக்கு அன்பும், அறிவும் சேர்ந்த பெயராய் வைச்சிருக்கோம் ’ என்றேன்.

ரொம்ப கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஒரு விநாடி நேர இடைவெளிக்குள் 7 வயது அன்புமதி கேட்டாள் “ நான் அப்பிடி இருக்கேனாப்பா?”

சொன்னதை முழுமையாய் புரிந்து அதற்குள்ளிருந்து ஒரு அர்த்தமுள்ள மிகப் பெரிய கேள்வியை மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருந்தாள்.

எனக்குத் தான் வாயடைத்துப் போனது. மகிழ்விலும், அதிர்விலும்..

சாமாளித்துக் கொண்டு உடனே சொன்னேன் ‘ நீ அப்பிடித் தான் இருக்கே ’

அன்புமதியின் முகத்தில் பெயரைக் காப்பாற்றி விட்ட ஒரு நிறைவு.

என் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது எனக்குத் தெரியாது எனபதும். என்ன காரணத்தினால் என் அப்பா அம்மா வைத்தார்கள். என்பதை ஏன் இத்தனை வயது வரை அறிந்து கொள்ளத் தோன்றவில்லை என்ற கேள்வி எனக்குள் வளர்ந்து வீங்கிக் கொண்டிருந்தது.

அரங்கமும் மனமும் நிறைந்த அறிமுகவிழா

எனது இரண்டாவது குறும்படமான ‘நடந்தகதையின்’ அறிமுகவிழா 08 08 09 அன்று சென்னை பிலிம்சேம்பரில் நடைபெற்றது.
அரங்கம் நிறைந்து வழிந்தது. நண்பர்கள் திரை இலக்கிய கலை ஆர்வலர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது.

Picture 125

Picture 158

Picture 218

Picture 200

Picture 207

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிவகாமி, தோழர் விடுதலை ராஜேந்திரன், இயக்குநர் சசி, எழுத்தாளர் அழகிய பெரியவன், ஓசை காளிதாசன் போன்ற பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இயக்குநர் மு.காந்தி வரவேற்றார். கவிஞர் அவைநாயகன் நிகழ்வை
தொகுத்து வழங்கினார்… ஏற்புரையை நான் சொன்னேன்.
நன்றியை நடந்தகதையின் தயாரிப்பாளர் அருள்சங்கர் சொன்னார்.
Picture153

Picture 166

நிகழ்ச்சியின் துவக்கமாக ‘நடந்தகதை’ திரையிடப்பட்டது.
படம் முடிந்து துவங்க்கிய பலத்த கைதட்டல் சில நிமிடங்கள் தொடர்ந்தது பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலித்தது.

Picture 117

விழா முடிந்ததும் வந்து தழுவி கைகுலுக்கிய நண்பர்களின், பார்வையாளர்களின் கைகளின் அழுத்தத்தில் அவர்களது நிறைவை உணர முடிந்தது..

ஒரு குறும்பட அறிமுகவிழா இத்தனை சிறப்பாகவும் அரங்கு நிறைந்த கூட்டத்தோடு எப்படி நடக்க முடிந்தது என்ற கேள்வியே இந்தவிழாவின் வெற்றி…

Picture 056

Picture 072

Picture 185

Picture 127

Picture 241

Picture 247

மேலும் விழாவைப் பற்றியும் ‘நடந்தகதை’ பற்றிய விமர்சனத்தையும் அறிமுகத்தையும் பின்வரும் இணைப்புகளில் காணலாம்..

http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=9dcf38c2-cc53-448c-9a93-12d7270312dc&CATEGORYNAME=TCHN

http://www.thenaali.com/thenaali.aspx?A=678

மேலும் இந்த குறும்படத்தின் குறுந்தகடை (டிவிடி) வாங்க விரும்புவர்கள் மற்றும் செய்திகளோ தகவல்களோ பெற விரும்புபவர்கள் ponsudhaa@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.

“நடந்தகதை” குறும்படத்தின் அறிமுக நிகழ்விற்கு அனைவரும் வருக.. வருக..

Aproved

“நடந்தகதை” என்னும் எனது இரண்டாவது குறும்படத்தின் அறிமுகவிழா 08 08 09 சனிக்கிழமை அன்று சென்னை பிலிம் சேம்பரில் மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது.

அழகிய பெரியவனின் ‘குறடு’ சிறுகதையை 20 நிமிடப் படமாக்கி உள்ளேன்.

இயக்கம்- பொன்.சுதா

ஒளிப்பதிவு – இராசாமதி (சக்கரைக்கட்டி, புதியவார்ப்புகள், பேசு
படத்தின் ஒளிப்பதிவாளர் )

படத்தொகுப்பு – எ.எல்.ரமேஷ் ( நாடோடிகள் படத்தின் படத் தொகுப்பாளர்)

இசை – மரியா மனோகர் ( மக்கள் தொலைக்காட்சியின் ஈழம், நேதாஜி தொடர்களின் இசையமைப்பாளர்)

கதை – அழகிய பெரியவன்

தயாரிப்பு – அருள் சங்கர்

அறிமுகவிழாவின் துவக்கத்தில் குறும்படம் திரையிடப்படும்.

அறிமுகவிழாவில்

தலைமை – தோழர் ஆர். நல்லகண்ணு

கருத்துரை-
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
இயக்குநர் சசி ( பூ படத்தின் இயக்குநர் )
தோழர் விடுதலை இராசேந்திரன்
எழுத்தாளர் சிவகாமி
எழுத்தாளர் அழகிய பெரியவன்
ஓசை காளிதாசன்

வரவேற்புரை – கவிஞர் அவைநாயகன்

நிகழ்ச்சித் தொகுப்பு – எழுத்தாளர் அஜயன் பாலா

நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
அனைவரும் வருக… வருக …

கறுப்பு வெள்ளை உலகம்

84

அன்புமதி திடிரென அந்தக் கேள்வியைக் கேட்டதும் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

கொஞ்ச நேர சிரிப்புக்குப் பின் தான் பதில் சொல்ல முடிந்தது.

அன்புமதி எனது 6 வயது மகள்.

சிறிய வயதில் இருந்து சில கேள்விகளால் என்னை வியப்பில் ஆழ்த்துவாள்.

செத்துப் போறதுன்னா என்னாப்பா,என்பது போன்ற கேள்விகள்.

நான் விளக்கமாய் உண்மையான பதில்களைச் சொல்லுவேன்.

அவைகளை பதிவுகளாகவும் போட்டிருக்கிறேன்.

இப்போது வளர வளர கேள்விகள் குறைந்து வருகிறதோ? சிந்திக்க நேரமில்லாமல் தொலைக்காட்சியும் , விளையாட்டும் மூளையில் நிறைந்து போனதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்படிக் கேட்டாள்.

கேள்வி இது தான்.

‘ அப்பா கறுப்பு வெள்ளை படங்கள் வந்த போது இந்த உலகம் கறுப்பு வெள்ளையாகவா இருந்தது ?’

இல்லை எல்லா செயல்களுடன் அவள் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற மகிழ்வுடன் அன்புமதியின் கேள்விகான பதிலை சொன்னேன்.

100000 பார்வைகளைத் தாண்டிய மறைபொருள் குறும்படம்

எனது மறைபொருள் குறும்படம் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது.

பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.

மக்கள் பார்வைக்காக யூ டியூப்பில் 8 மாதத்திற்கு முன் படம் பதிவிடப் பட்டது.

8 மாத முடிவிற்குள் 1,19,027 பார்வைகளைப் பெற்றுள்ளது.

பார்த்து பாராட்டிய, விமர்சித்த அனைவருக்கும் நன்றி…

நீங்கள் பார்க்க விரும்பினால்…

பார்க்கும் முன் ஒரு வார்த்தை நான் பகுத்தறிவுவாதி … பெரியாரின் வழி நடப்பவன்.

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்