கதைகளில் குட்டிக் கதைகள் அற்புதமானவை.
சாருநிவேதிதாவின் குட்டிக் கதைகளைச் சொல்லவில்லை.
சில வரிகளில் அற்புதமான கருத்துக்களையோ, சிந்தனையையோ, நகைச்சுவையோ கொடுத்து விடக் கூடியவை குட்டிக் கதைகள்.
ஈசாப் குட்டிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவைகள் தான் சிறுகதைகள், நாவலுக்கான மூலவிதைகள்.
ஜென் கதைகள், மற்றும் மத உபதேசங்களின் பொருட்டு உண்டான குட்டிக் கதைகள் ஏராளம்.
தமிழில் பாக்யராஜ் கேள்வி பதிலில் பல்வேறு குட்டிக் கதைகளைப் பயன்படுத்தி பிரபலப்படுத்தினார்.
உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் கதைகளும், நறுக்குகளும் தமிழ் இலக்கியத்திற்கான பெரும் கொடைகள்.
எஸ். ராமகிருஷ்ணன் கூட இந்த ஆண்டில் நகுலனின் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுக்க பெரும் இலக்கியவாதிகள் ஒரு சில குட்டிக் கதைகளையாவது எழுதியுள்ளார்கள்.
மின் மினி தேசம் என்ற சமீபத்தில் பூத்த வலைப்பூ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.
குட்டிக் கதைகளுக்கு மட்டுமே ஆன ஒரு வலைப்பூ அது. கொட்டிக் கிடக்குது குட்டிக் கதைகள் அங்கே.
பெரும்பாலும் நகைச்சுவையும், அங்கதமுமான குட்டிக் கதைகளே நிறைந்திருக்கிறது.
குட்டிக் கதைகளுகான வலைப்பூவிற்கு மின்மினி தேசம் என்ற ரசனையான பெயர்.
குட்டிக் கதை ரசிகர்கள் தவறாமல் தினமும் எட்டிப் பார்க்க வேண்டிய வலைப்பூ அது.
படித்துப் பயன் பெறுக…