கண்ணாடிக் கத்திகள்

சும்மா போகும்

திருடர்களின் கால்களை

சவால் விட்டு

அழைக்கின்றன

 

அறைகளில்

பாதுக்காக்கப் படுகின்ற

பொக்கிஷங்களைப் பற்றி

தண்டோரா அறிவிக்கின்றன  

 

கட்டிடப் பொருட்களோடு

சரிவிகிதமாய் 

அச்சமும் கலந்து

வீடு எழும்பியதையும்

 

பறந்தொய்ந்து சிறுபறவையும்

இளைப்பாற 

இடம் தர விரும்பாத

குரூரர்களின்

இருப்பிடமென்பதையும்

உறுதி செய்கின்றன ..

 

.படம்

 

கூரிய கத்திகளாய்

உடைந்த சீசாக்களைப்

பதித்து வைத்திருக்கும்

சுற்றுச் சுவர்கள்.

 

 

சிறந்த இந்திய குறும்படமாக ‘ நடந்த கதை’ தேர்வு

தீபிகா மற்றும் தமிழக செய்தி ஊடகத்துறையும் நடத்திய சர்வதேச குறும்படவிழா (ISFFI 2010 ) மார்ச் 20, 21ம் தேதிகளில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்து முடிந்தது.

இந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 420 குறும்படங்கள் கலந்து கொண்டன.

இறுதி போட்டிக்கு 70 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனிமேசன் படங்கள், ஆவணப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

70 படங்களும் 20-21 தேதிகளில் காலை முதல் மாலை வரை திரையிடப்பட்டன.

பெரும்பாலும் காட்சி ஊடகத்துறை மாணவ, மாணவிகளால் நிறைந்திருந்தது ஆல்பர்ட் தியேட்டர்.

போட்டிகள் 2 பிரிவாக நடைபெற்றது. சர்வதேச அளவிலான படங்களுக்கான போட்டி மற்றும் இந்திய

அளவிலான குறும்படங்களுக்கான போட்டி என்று நடைபெற்றது.

ஸ்பெயின், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, ஹங்கேரி, இங்கிலாந்து பிரஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா,
சுவிஸ்சர்லேண்ட், கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டன.

இந்திய அளவிலான போட்டிகளில் கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா,

குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து குறும்படங்கள் கலந்து கொண்டன.

இந்திய அளவில் சிறந்த குறும்படமாக தமிழ் குறும்படமான ‘ நடந்த கதை’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது
அளிக்கப் பெற்றது.

இது நடந்த கதை வெளியான 6 மாதங்களுக்குள் அது பெறும் 5 வது விருது ஆகும்.

’ நடந்த கதை ’ பொன்.சுதாவாகிய என்னால் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கப்பட்ட 21 நிமிட
குறும்படம்.

இதன் கதை அழகிய பெரியவன். அவர் எழுதிய ’குறடு’ சிறுகதையே ‘ நடந்த கதை’ யாக உரு மாற்றம்
ஆனது.

இப்படத்தை அருள் சங்கர் தயாரித்துள்ளார். நிறுவனம் நண்பர்கள் திரைகுழுமம்.

ஒளிப்பதிவாளர் இராசாமதி ( சக்கரைக்கட்டி, சித்து +12, பேசு, குறுநில மன்னர்கள்).

படத்தொகுப்பு ஏ.எல். ரமேஷ் ( நாடோடிகள்)

இசை மரியா மனோகர் ( நாயகன் மற்றும் ஈழம், நேதாஜி தொடர்)

கதை சொல்லியின் குரல்- கவிஞர். அறிவுமதி.

கதை நாயகன் கருணாகர்.

நடந்த கதையில் இடம் பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், மற்றும் இதன் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக் குறும்படத்தை காண விரும்புவர்கள் இதன் குறுந் தகடை வாங்கிப் பயன் பெறலாம்.

நடந்த கதையின் குறுந்தகடு சென்னையில் நியூ புக் லேண்ட்ஸ், டிஸ்கவரி பிக் பேலஸ் போன்றவற்றில் பெறலாம்.

கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கும்.

தபாலில் பெற விரும்புபவர்கள் – 9444324316 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள ponsudhaa@gmail.com என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.

ஹைக்கூத் தோட்டம்- 58

பெரும் மழைநாள்
தனிமையில் குளிக்கிறது
மலை அருவி.

ஹைக்கூத் தோட்டம்- 57

andar420

அமைதியாய் இருந்தாலும்

மதம் பிடித்த யானை

நெற்றியில் நாமம்.

ஹைகூத் தோட்டம் – 56

2408335704_774f56cd53

மரக்கிளையில் காத்திருக்கின்றன

சின்னஞ்சிறு குஞ்சுகள்

கூண்டுக்குள் தாய் .

ஹைகூத் தோட்டம் – 55

3035259896_f9c3699064_b

இன்னும் தொடரும் வாழ்வு

ஆழப் பாய்ந்த கத்தி

அவள் பிரிவு….

ஹைகூத் தோட்டம் – 54

jewellery_pic

உள்ளே வெளியே விளையாட்டு

சலிக்காமல் விளையாடுகிறது

என் வீட்டு நகைகள்…

ஹைகூத் தோட்டம் – 53

parrots20dec06007-778961

பறக்கும் கிளிக் கூட்டம்

இடம் மாறும் கிளிகள்

திருத்தி வரைதலா

ஹைகூத் தோட்டம் – 52

1284523553_3273cf3bc9

லஞ்சம் கொடுத்தேன்
கிடைத்தது பதவி
மனைவி

ஹைகூத் தோட்டம் – 51

three_goats

ஆடுகள் கூடி தேர்ந்தெடுக்கின்றன

நல்ல பலி பீடத்தை

தேர்தல் நாள்

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்