கண்ணாடிக் கத்திகள்

சும்மா போகும்

திருடர்களின் கால்களை

சவால் விட்டு

அழைக்கின்றன

 

அறைகளில்

பாதுக்காக்கப் படுகின்ற

பொக்கிஷங்களைப் பற்றி

தண்டோரா அறிவிக்கின்றன  

 

கட்டிடப் பொருட்களோடு

சரிவிகிதமாய் 

அச்சமும் கலந்து

வீடு எழும்பியதையும்

 

பறந்தொய்ந்து சிறுபறவையும்

இளைப்பாற 

இடம் தர விரும்பாத

குரூரர்களின்

இருப்பிடமென்பதையும்

உறுதி செய்கின்றன ..

 

.படம்

 

கூரிய கத்திகளாய்

உடைந்த சீசாக்களைப்

பதித்து வைத்திருக்கும்

சுற்றுச் சுவர்கள்.

 

 

  • எனது கவிதை நூல்கள்


    கவிதை அல்ல காதல்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்
    நானும் நீயும் நாமான போது
    வெளியீடு: விஜயா பதிப்பகம் மழையின் சுவடுகள்
    வெளியீடு: விஜயா பதிப்பகம்