எனது நண்பர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் மிகச் சிறந்த குறும்படமான ‘திற’ குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.2009 | வியாழன் | மாலை 6.30 மணி ரஷ்ய கலாச்சார மய்யம் (ஹோட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 நடைபெற உள்ளது.
‘திற’ தமிழில் வந்த குறும்படங்களில் ஒரு சில சிறந்த படங்களில் முக்கியமானது . சதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதை ஒன்றை இன்றைய கால கட்டத்திற்கு தக்கவாறு தழுவி எடுக்கப்பட்ட படம்.
தரமான தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. மிகவும் சவாலான கதையை திறம்பட கையாண்டுண்டிருந்தார் பிரின்சு என்னாரெசு பெரியார்.
குஜராத் கலவரத்தை காட்சிப்படுத்தி அந்த கலவரத்தின் ஒட்டு மொத்த வலியையும் உணர்த்தக் கூடிய ஒரு சம்பவமாக இருக்கிறது கதை.
பிரின்சு என்னாரெசு பெரியார் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தவர். கெளதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
சமூக சிந்தனையும், அசாத்திய துணிச்சலும் தான் இப்படத்திற்கான பின்னனியில் இருக்கிறது.
’திற’ குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நாளை நடக்கிறது. அனைவருக்கும் இக்குறும்படத்தை காணும் வாய்ப்பு.
அனைவரும் வருக.