அழகிய பெரியவன் தமிழின் முக்கியமான படைப்பாளி.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்ற அனைத்து இலக்கிய படைப்பாக்க வெளிகளிலும் தனது முத்திரையை பதித்து வருபவர்.
தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கக் கூடியவை இவரது படைப்பின் குரல்.
நவீன எழுத்து முறையும், வாழ்வியல் விட்டு விலக்காத கதை களமுமாக அற்புத கலவை இவரது எழுத்துகள்.
பேரணாம் பட்டைச் சேர்ந்தவர் அழகிய பெரியவன்.
ஒரு பள்ளி ஆசிரியராக எளிய வாழ்வு வாழும் எழுத்தாளர்.
எளிமையான மனிதர்.
சமரசமற்ற போராளி, எழுத்தோடு நில்லாமல் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களிலும் முன்னனியில் நிற்பவர் அழகிய பெரியவன்.
அவரது ‘ உனக்கும் எனக்குமான சொல் ‘ என்ற கவிதைத் தொகுப்பிற்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது.
சரியான நபருக்கு சரியான படைப்புக்கு விருது கிடைத்துள்ளது.
அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.